ப்ரம்ம பதம்..
ஏணிப்படிகளை எண்ணி எண்ணி ஏறி
பாம்புக் கடி கீழிறக்க
ஏறவும் இறங்கவுமாய் அல்லல்பட்டு
முக்கி முனகி மூச்சுமுட்டி
பரமபதத்தை எட்டிய கிழவியை
தொண்ணூற்றெட்டில்
பெருங்கொண்ட பாம்புகடித்து
இரண்டில் இறக்கிவிட
குட்டிக் குழந்தையாகி
வீறிட்டலறினாள்..
“ அடப்பாவி
திரும்பவும் முதலேருந்தா..”
ஹா... ஹா... ரசித்தேன்...
பதிலளிநீக்குநன்றி தனபாலன்.:)
பதிலளிநீக்குவலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
பதிலளிநீக்குஎன்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!