சனி, 23 பிப்ரவரி, 2013

கனியக் கூவும் சேவல்.

மேகம்வழி கசிந்த நிலாப்பால்குடித்து
பின்னிக் கிடந்த கொடிகளைத்
தழுவிக் கிடந்தது இருள் பாம்பு.
மதுபானம் ஓடிய சாலைகள்
முயங்கிக் கிடந்தன மௌனத்தில்.
கரும்புச் சாறு வழியும் குரலில்
கனியக் கனியக் கூவியது சேவல்.

1 கருத்து:

  1. வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

    பதிலளிநீக்கு

பதிலுக்கு நீங்களும் கிறுக்குங்க.. :)))