செவ்வாய், 1 ஜனவரி, 2013

இலை வாழ்வு.

இலை வாழ்வு..
*********************
முடிவில்லாத வெளியில்
இறக்கைகள் இல்லாத  பயணம்.
ஒவ்வொரு கோள்களிலும்
ஒவ்வொரு ரூப ஜீவிதம்.
கோபமும் காமமுமற்ற
நீள்வெளியில் யாதுமற்ற ஒன்றாய்
யாதுமாய்..
அறியாதது போல்
தழுவும் காற்று
வழியும் நிலவு,
ஒழுகும் மழை.
மின்மினிப் பூச்சிகளும்
சில்வண்டுகளும் கிசுகிசுக்க
பயணம் தொடர்கிறது
பழுத்தாலும் தேங்காமல்

1 கருத்து:

  1. வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

    பதிலளிநீக்கு

பதிலுக்கு நீங்களும் கிறுக்குங்க.. :)))