செவ்வாய், 18 டிசம்பர், 2012

அகோரி.

பிறைநிலவுச் சடைபிடிக்க
புலித்தோல் போர்த்திய பாம்பு.
வராகம் மண்கிளற
பொய்யுரைக்கிறது
தாழைமடல் பிடித்த அன்னம்
கங்கைக்குடம் சுமந்து
சுமை கடந்து செல்கிறான் சிவன்.
சாம்பல் பூசிக் கிடக்கிறது
மன அகோரி.

1 கருத்து:

  1. வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

    பதிலளிநீக்கு

பதிலுக்கு நீங்களும் கிறுக்குங்க.. :)))