செவ்வாய், 27 நவம்பர், 2012

எமிரேட் ஹியூமர் க்ளப்புக்காக மார்ச் 2010 இல் எழுதியது.

சந்தோஷமாய்ச் சிரித்திடு
செல்லச்சிட்டே சிரித்திடு
சின்னக்கிளியே சிரித்திடு
செந்தமிழில் சிரித்திடு ...

நாளும் உள்ளன்போடு
உள்ளம் ஒரு ஒளியாய்  ஒளிர
முகம் ஒரு மலராய் விரிய
இதழ்ப்பூவில் மலரட்டும் உன் புன்னகை....

அனைவருக்கும் கொடு உன் புன்னகையை
பொன்னகையைவிட மேலானது
துன்புருவோருக்கு ஆறுதலாய்
நோயுற்றோருக்கு தேறுதலாய்...

என்நேரமும் சிரித்து உன் அழியாத
செல்வத்தை அனைவருக்கும் பங்கிடு
சின்னச் சின்னச் சந்தோஷங்கள்
இயற்கை அன்பு நிகழ்வு நெகிழ்வு
சினேகம் பாசம் அனைத்துக்கும் ஒரு புன்னகை

சூரியக்கதிர் போல் நிலவின் ஒளிபோல்
வாய்விட்டுச் சிரித்திடு நோய்விட்டுப் போக
சங்கீதமாய்ச் சிரித்திடு
சத்தம்போட்டுச்சிரித்திடு

காலன் கூட ஓடிப்போக
குலுங்கிக் குலுங்கிச் சிரித்திடு
சிறுமை கண்டு சிரித்திடு
வெகுளி கண்டு சிரித்திடு

சிரிப்பெனும் சில்லறையை
சிந்திச் சிதறி விடு...
இருப்பவனோ இல்லாதவனோ
மனம் விட்டுச் சிரித்திடு..

வாய் கொள்ளாமல் புன்னகை விரிய
வேண்டாம் என்று சொல்லாத ஒரே தானம் இது
காண்பவர் முகத்திலெல்லாம் ஒளியைப்பற்றவைக்க
சிரிப்பெனும் தீபத்தை ஏற்றிவிடு...

ஒன்று பலவாய்ப் பெருகி
உள்ளன்போடு கொடுத்திடு
ஒஹோ என வாழ ஒஹோவென்றும்
ஆஹாவென வாழ ஆஹாவென்றும்,,,,,,,,,,,  (சந்தோஷமாய்ச் சிரித்திடு )

3 கருத்துகள்:

  1. ஒவ்வொரு வரியும் அருமை...

    மிகவும் பிடித்தது :

    /// அனைவருக்கும் கொடு உன் புன்னகையை
    பொன்னகையைவிட மேலானது
    துன்புருவோருக்கு ஆறுதலாய்
    நோயுற்றோருக்கு தேறுதலாய்... ///

    பதிலளிநீக்கு
  2. சூரியக்கதிர் போல் நிலவின் ஒளிபோல்
    வாய்விட்டுச் சிரித்திடு நோய்விட்டுப் போக
    சங்கீதமாய்ச் சிரித்திடு
    சத்தம்போட்டுச்சிரித்திடு - Siripathu nallathu pothuvaga. Kuzhanthai sirithaal kavalaiyum maranthu pogum. Arumai yana siruppu kavithai.

    பதிலளிநீக்கு
  3. வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

    பதிலளிநீக்கு

பதிலுக்கு நீங்களும் கிறுக்குங்க.. :)))