திங்கள், 24 செப்டம்பர், 2012

சமர் வீழும் அம்புகள்.

விஷக்காற்றோடு நீளும்
பாம்பின் நாவு
உண்கிறது என்னை..
இறக்கை முளைத்த
ட்ராகனாய் நானும்
நெருப்புமிழத் துவங்குகிறேன்.
தொலைக்காட்சிப்
புராணத் தொடரின்
சமர் வீழும் அம்புகளாய்
தொய்ந்து கிடக்கின்றன
நமதான உடல்கள்.
விஷமும் நெருப்பும்
சிரசின் மேலேறி
செந்நிற ஒளியேற்றுகிறது
நம்முகங்களை.

1 கருத்து:

  1. வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

    பதிலளிநீக்கு

பதிலுக்கு நீங்களும் கிறுக்குங்க.. :)))