நீதானென எனக்கு தெரியும்.
நீயில்லை என நீயே சொல்வதால்
நம்பிக்கையுறுகிறது மனது..
நீ ஏன் நீயில்லாமல்
போகவேண்டும் என் முன்னால்
என தர்க்கிக்கிறது மூளை.
நீ எதிர்பார்த்த நானில்லையோ இது
அல்லது உன்னை
வெளியிடத் தயக்கமோ.
நீயே உன்னை வெளிப்படுத்தும்போது
நம்பிக் கொள்கிறேன் நீதானென்று..
அதுவரை அந்நியமாகவே இரு
அருமை.
பதிலளிநீக்குவாழ்த்துகள்.
நன்றி ரத்னவேல் சார்
பதிலளிநீக்குவலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
பதிலளிநீக்குஎன்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!