வியாழன், 14 ஜூன், 2012

நீதான்,..

நீதானென எனக்கு தெரியும்.
நீயில்லை என நீயே சொல்வதால்
நம்பிக்கையுறுகிறது மனது..
நீ ஏன் நீயில்லாமல்
போகவேண்டும் என் முன்னால்
என தர்க்கிக்கிறது மூளை.
நீ எதிர்பார்த்த நானில்லையோ இது
அல்லது உன்னை
வெளியிடத் தயக்கமோ.
நீயே உன்னை வெளிப்படுத்தும்போது
நம்பிக் கொள்கிறேன் நீதானென்று..
அதுவரை அந்நியமாகவே இரு

3 கருத்துகள்:

பதிலுக்கு நீங்களும் கிறுக்குங்க.. :)))