புதன், 16 நவம்பர், 2011

பழசு..

செத்துப்போன பாம்பைத்
தட்டச்சாய் அடிக்காதே..
பிறகு அது
உன் மேலும் என் மேலும்
சதைச்சேறு வீசும்.

ஊராரின் பற்கள் அவலுடன்
அதில் கிடக்கலாம்.
நம் முன்னோர்களை சந்தியில்
நிறுத்தக்கூடிய
ஆதார எலும்புகள் கிடைக்கலாம்.

செத்த பாம்பைத் தூரப்போடு..
தட்டச்சாய் அடிக்காதே..

உன் சரித்திரமும்
என் சரித்திரமும்
அம்பலமாகும்.
மூன்று கோடிப் பற்கள்
நமுட்டுத்தனமாய்ச் சிரிக்கும்..

செத்த பாம்பைப் புதைத்துப் போடு
அது தானாகத்
தோலுரிக்காது.
சதைச்சேறும் அடிக்காது..

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

பதிலுக்கு நீங்களும் கிறுக்குங்க.. :)))