வெள்ளி, 16 ஏப்ரல், 2021

விடை

ஒரு கலைஞன் விடைபெறும்போது 
நடந்துவந்த பாதையைத் 
திரும்பிப் பார்க்கத் தோன்றுகிறது. 

என்னுடைய கடமைகளை எல்லாம் 
நிறைவேற்றி விட்டேனா.. 

பாதி எது
முழுமை எது ? 

இதற்காகக் கலங்குவதா 
நம் முறைக்காகக் காத்திருப்பதா.. 

குழப்பம் சூழ்கிறது. 
நிறைவு எப்போது ? 

#விவேக்
 

1 கருத்து:

  1. வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும் !
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும் !!

    பதிலளிநீக்கு

பதிலுக்கு நீங்களும் கிறுக்குங்க.. :)))