ஞாயிறு, 27 செப்டம்பர், 2020

நிழல் வாழ்வு

நிழல் வார்த்தைகள்
உன் பின்னே 
ஓடி வருகின்றன.
விடியலில் 
உன் மதுக்கோப்பைக்குள்ளும்
இரவில் உன் வாயினுள்ளும் 
குடியிருக்கும் அவை
சாராயம் ஏறுவதுபோல்
சரசரவென ஏறுவதும்
பின் நாற்றத்தோடு வீழ்வதுமாய்
வாழ்கின்றன.
என்னடா இந்த நாறப் பிழைப்பென
அவை நாராசத்திலிருந்து கூவுவதை
ஒருபோதும் சட்டை செய்ததில்லை நீ.
இருந்தும் சொற்கள்
எச்சமாய் விழுந்தும் எழுந்தும்
இருந்தும் இல்லாமலும்
நிழல் வாழ்வில்.


  

1 கருத்து:

  1. வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும் !
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும் !!

    பதிலளிநீக்கு

பதிலுக்கு நீங்களும் கிறுக்குங்க.. :)))