வியாழன், 17 செப்டம்பர், 2020

உயிருடை

நிலைக்கண்ணாடியில்
அறைக் கதவுகளுக்கிடையில்
வாசல் நடையில்
சாவி துவாரத்தில்
ஆடிச் செல்கிறது ஒரு பிம்பம்
முன்னோர் ஒருவரின்
சாயலும் வாசனையும் கொண்டு
கண்ணோரத்தில் நடமாட்டம்.
விதிர்த்துத் திரும்பும்போதெல்லாம்
விசிறிகள் போல் ஆடுகின்றன
எங்கோ கொடியில் தொங்கும் உடைகள்
உடைகள் கழற்றி உலவும் அவர்களுடன்
உயிருடை கழற்றாமல் உலவுகிறேன் நானும்.
  

1 கருத்து:

  1. வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும் !
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும் !!

    பதிலளிநீக்கு

பதிலுக்கு நீங்களும் கிறுக்குங்க.. :)))