நெடுங்கோட்டைச் சுவரென
நீண்டுகிடக்கிறது
நமக்கிடையான உறவு.
சில முதலைகள்
உள்நுழைந்து அகழியை
அகழாய்வு செய்கின்றன.
எச்சரிக்கை வீரர்களின்
பாரா ஒலி வேறு அசந்தர்ப்பமாய்.
விடியலுக்குள் நீ வந்து சென்ற கனவை
இருளோடு தேய்த்து
அழித்துவிட நினைக்கிறேன்.
சூரியன் புலரும் பொழுதில்
சுடர்விட்டுத் துலங்கும்
உன் நினைவை என்ன செய்ய.
Nice post. Thanks For Sharing The Amazing content. I Will also share with my
பதிலளிநீக்குfriends. Great Content thanks a lot.
wish from tamilnadu
வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும் !
பதிலளிநீக்குஎன்றும் நம்முள் வலிமை பெருகட்டும் !!