திங்கள், 30 மார்ச், 2020

மேகமாய்..

நிழலற்றுப் பறந்துவரும் அவள்
நிஜமற்றுக் கலைந்து கொண்டிருக்கிறாள்.
பறவைகளாய் சில விமானங்கள்
கொக்குகளாய் சில கப்பல்கள்
மரங்களாய் சில கட்டிடங்கள்
அசைவற்றுக் கிடக்கின்றன.
உயிரும் மெய்யுமாய் சொற்களுக்குள்
ஊமையாகிப் போனார்கள் மனிதர்கள்.
சித்திரமாய் உறைந்திருக்கிறது பூமி
சூரியன் புகைந்து கொண்டிருக்க
மேகமாய்ப் பிரிந்து கொண்டிருக்கிறாள் அவள்

  

1 கருத்து:

  1. வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும் !!

    பதிலளிநீக்கு

பதிலுக்கு நீங்களும் கிறுக்குங்க.. :)))