நடக்கும் பருவங்களில் இருந்து
மிதக்கும் பருவத்திற்கு நகர்த்தியது
பதின்மம்.
தவழ்ந்த பருவங்களில் இருந்து
குன்னிய நடைக்குப் பழக்குகிறது
முதுமை.
நிமிர்ந்த பருவங்களும்
திமிர்ந்த பருவங்களும் கடக்கின்றன
மின்னலாய்.
புகைப்படத் துளிர்க்கரங்கள்
கண்களோடனைத்தையும் சுருக்குகின்றன
மீன்செதில் மினுக்கலாய்.
நன்றி டிடி சகோ
பதிலளிநீக்குவலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
என்றும் நம்முள் வலிமை பெருகட்டும் !!