புதன், 13 நவம்பர், 2019

ஆநிரை

குளிரும் மழையும்
ஒன்றன்மேல் ஒன்று
கவிழ்ந்துகொண்டிருக்கின்றன
ஒரு நாற்காலியில் அமர்ந்ததும்
காத்திருந்து சூழத் தொடங்குகின்றன
நம்மையும்.
முற்றுகைக்குட்பட்ட கோட்டைக்குள்
ஆதரவற்ற ஆநிரைகள்போல்
சிலிர்க்கிறது உடல்.

1 கருத்து:

  1. வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும் !!

    பதிலளிநீக்கு

பதிலுக்கு நீங்களும் கிறுக்குங்க.. :)))