புதன், 6 மார்ச், 2019

முடக்கம்.

நகரத்தின் மையத்தில்தான்
அமைந்திருக்கிறது வீடு.
நாலாதிசையும் பறக்கிறது சிந்தனை.
நகர்விலும் பெயர்தலிலும்
புதிதாக என்ன முளைத்துவிடப் போகிறதென
முடங்கிப் படுத்திருக்கிறது மனம்.
வெம்மையில் குளிர் கர்ப்பமாய்
சுருட்டி ஒளிந்திருக்கிறது சாளரம்.
தொப்புள் கொடியாய்
போஷித்துக் கொண்டிருக்கிறது
திறந்து மூடும் வாயில்.

3 கருத்துகள்:

பதிலுக்கு நீங்களும் கிறுக்குங்க.. :)))