திடீரென விழுந்த
வார்த்தை அணுகுண்டால்
நின்று போயிருக்கிறது
நமது உரையாடல்.
சிதறிக்கிடக்கின்றன
கட்டிடங்களைப் போல
நமது உள்ளங்கள்.
எடுக்கவும் கோர்க்கவும்
உடுக்கை இழந்தவன் கைபோல்
இல்லை இங்கொரு நட்பு.
புதைகுழியில் மணற்செறிந்த
உடலுடன் புதைந்துகிடக்கிறது
புதுப்பிக்க இயலாத உயிர்.
வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
பதிலளிநீக்குஎன்றும் நம்முள் வலிமை பெருகட்டும் !!