புதன், 3 அக்டோபர், 2018

வனமடி.

முரசடித்து முழங்கிச்
செல்கிறது மேகம்.
மலைமுலைகளில் பாலாய்ப்
பெருகிவழிகிறது அருவி.

வனமடியிலிருந்து
துளிர்க்குழந்தைகளை
விரல்பிடித்துத்
தூக்குகிறது சூரியன்

ஈர ரத்தமாய்
வேர்வருடி
பசிய வாசத்தோடு
நழுவிக்கொண்டிருக்கிறது நதி

கதகதப்பு பரவப்பரவ
கலகலக்கிறது
பறவைகளின் தாலாட்டால்
கனிந்திருக்கும் காடு.
  

2 கருத்துகள்:

பதிலுக்கு நீங்களும் கிறுக்குங்க.. :)))