முரசடித்து முழங்கிச்
செல்கிறது மேகம்.
மலைமுலைகளில் பாலாய்ப்
பெருகிவழிகிறது அருவி.
வனமடியிலிருந்து
துளிர்க்குழந்தைகளை
விரல்பிடித்துத்
தூக்குகிறது சூரியன்
ஈர ரத்தமாய்
வேர்வருடி
பசிய வாசத்தோடு
நழுவிக்கொண்டிருக்கிறது நதி
கதகதப்பு பரவப்பரவ
கலகலக்கிறது
பறவைகளின் தாலாட்டால்
கனிந்திருக்கும் காடு.
அற்புதம்
பதிலளிநீக்குநன்றி ஜீவா
பதிலளிநீக்குவலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
என்றும் நம்முள் வலிமை பெருகட்டும் !!