ஞாயிறு, 7 மே, 2017

சக்கைகளாய்..

சனம்
சுடும்
குளிர்பொழுதுகள்
இனமற்று வளையும்
இமைக்குள் கலையும்.

பாறைகள்
செருப்புப் பாதங்களால்
சில்லுகளாகும்.
திறந்திருக்கும்
கதவுகள்
எதிர்பாராமல்
மூடப்படும்.

பகல் ரொட்டிக்குள்
நட்சத்திரச் சீனிகள்
புதைந்து போகும்.

இரவுகளில்
நட்சத்திரக் கொலுசுகளின்
சிணுங்கல்கள்
லயமற்று லயமற்று..

மரங்கள்
பூதமாய் சுயம் விரிக்க
சுயம் விரிக்க..

பூமியின் ஆகாரப் பகுதிகள்
ஆதாயப் பகுதிகள்
ஆதாரப் பகுதிகள்
சிலசமயம் பிசிறடிக்கும்

கடலைத் தோலிகளாய்
மனிதம் எறியப்படும்
மனிதாபிமானம் உடைபட்டுச்
சக்கையாய்
சக்கைகளாய்..

1 கருத்து:

  1. வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

    பதிலளிநீக்கு

பதிலுக்கு நீங்களும் கிறுக்குங்க.. :)))