வியாழன், 17 நவம்பர், 2016

வாசமொழி.

பூக்கள் மலர்கின்றன
வாசமொழி பேசி..
புரியவில்லை
ஆனாலும் நுகர்கிறேன்


*****************************


பேரன்புக் காற்றுப் பட்டாலும்
நடுங்கிச் சிலிர்க்கிறது
தோட்டத்தின் மூலையில்
புதிதாய்ப் பூத்திருக்கும்
ஒற்றைப்பூ.

*****************************


3 கருத்துகள்:

பதிலுக்கு நீங்களும் கிறுக்குங்க.. :)))