புதன், 24 ஆகஸ்ட், 2016

என் ப்ரிய அப்பாவுக்கு,



என் ப்ரிய அப்பாவுக்கு,

என் நினைவுத் தாள்களில்
உங்கள் பிறந்தநாள்
ப்ரியத் தாமரையாய்
மலரும்.

மறக்கமுடியுமா
இந்நாளை.
நாற்பத்துமூன்று
வருடங்களாக
உங்கள் பிறந்ததினம்
வருகிறது.
என் நினைவின் கருவிலோ
புதுப்பரிமாணங்களில்
புதிதுபுதிதாய் நீங்கள்
ஜனித்துக்கொண்டே
இருக்கின்றீர்கள் அப்பா !
உங்கள் ஜனனம்
நிகழ்ந்துகொண்டேயிருக்கிறது.

அப்பா..!
நாங்கள் ஊர்க்குருவிகளாய்த்தான்
இருந்தோம்.
எங்களை வழிநடத்தி
உயரவைத்த
இராஜாளி நீங்கள்.

வளர்தலும் தேய்தலும்
நிலவுக்குண்டு
ஆனால்
உங்கள் அன்போ
வளர்தல் மட்டுமே அறிந்தது.

ப்ரச்சனைகள் என்ற
அலைகளுக்குள்ளும்
காற்றுக்குள்ளும் சிக்கியும்
கலங்காமல்
எங்களைக் கரை சேர்த்த
மாலுமி நீங்கள்.

அப்பா !
உங்க நினைவு
காயாத ஓவியமாய்
இன்னும் என்னுள்
புதிதாய்..

அப்பா!
உங்களைப் புகழ முயன்று
நான் தோற்றுப் போகின்றேன்.
நீங்களே ஒரு கவிதை.
உங்களுக்கும் ஒரு கவிதையா. 

-- 86 ஆம் வுடைரி. 

3 கருத்துகள்:

  1. அப்பாக்கள்
    எப்போதும்
    வெளிக்காட்டாதவர்கள்.

    தூக்கும்
    மூட்டைச் சுமைகளில்,
    இழுக்கும்
    வண்டியின்
    சக்கரச்
    சுற்றுகளில்..
    அடிமையாய்..
    ஊழியனாய்..
    நகரும்
    அவன் நாட்களில்
    ஒளிர்வதெல்லாம்
    பிள்ளைகளின்
    எதிர்காலம்..

    பிள்ளையோ
    பையனோ..
    வயிறுகிழித்து
    பெற்றுப்போட்டதில்
    தொடங்கும்
    சோதனை...

    சுணங்கும்
    குழந்தைக்குப்
    பதறி...
    சொட்டு
    மருந்து
    தொடங்கி..
    விட்டுவரும்
    காய்ச்சலுக்கு
    கலங்கி..

    பள்ளியென..
    கல்வியென..
    எல்லாம்
    முடிந்த பின்..
    அம்மாக்கள்
    படமாகிறார்கள்..
    அப்பாக்கள்
    பாடமாகிறார்கள்..////


    அப்பாவை நினைவூட்டிவிட்டீர்கள்

    பதிலளிநீக்கு
  2. வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

    பதிலளிநீக்கு

பதிலுக்கு நீங்களும் கிறுக்குங்க.. :)))