வியாழன், 7 ஏப்ரல், 2016

வார்த்தை வரம்.



விடிவிளக்கைச்
சுற்றிச் சுற்றிவரும்
விட்டில் பூச்சியைப் போல
மனசு கிடந்து மன்றாடுகிறது.
அதற்கு
ஆறுதலாக
ஒரு வார்த்தை..
உன் வாயில்
வரவேண்டுமென என்னால்
எதிர்பார்க்கப்படுகின்றது
உன் வார்த்தை வரத்தைச்
சிறிது தானமாகவாவது
எனக்குக் கொடுத்து
விடேன். !

-- 82 ஆம் வருட டைரி. 

3 கருத்துகள்:

பதிலுக்கு நீங்களும் கிறுக்குங்க.. :)))