வியாழன், 15 அக்டோபர், 2015

தவயோகி

தவ யோகி :-



வேலையற்ற விடலைப் பையன்கள்
ஞாயிற்றுப் பொழுதுகளில்
சாயங்கால வெய்யில்களில்
க்ரிக்கெட் விளையாடியபோது
ஐ ஏ எஸ் வீட்டு
மாடிச் சன்னல் கண்ணாடி
தற்பெருமை பேசிக் களித்தது.
பார்த்தாயா என் தவவலிமையை.
இந்தப் பந்து ஊர்வசி என்
தவத்தைக் கெடுக்க
எத்தனைவகை நாட்டியமாடினாலும்
அசையாத தவயோகி யானென்று
இதைக்கேட்டு ஜன்னல் கம்பிகள்
தம்முள் சிரித்துக்கொண்டன
மௌனமாய்.

-- 85 ஆம் வருட டைரி 

3 கருத்துகள்:

பதிலுக்கு நீங்களும் கிறுக்குங்க.. :)))