புதன், 14 அக்டோபர், 2015

எனக்கு வேண்டாம் உனது ஸ்நேகம்



எனக்கு வேண்டாம் உனது ஸ்நேகம்

கூண்டுக்குள் மூளைப்பறவை அடைத்து
சிதறித் தவிக்கும் நீ
எனக்கு வேண்டாம் உனது ஸ்நேகம்

பறவைகள் ஆலமரங்களில்
கூடு கட்ட கூடுதோறும்
குந்திச் செல்லும் பறவையாய் நீ
எனக்கு வேண்டாம் உனது ஸ்நேகம்

கிளிகள் மூக்கால்குத்திக்
கொட்டை தின்னும்., ஆனால்
மனசு குத்தி வேதனை தின்னும் நீ
எனக்கு வேண்டாம் உனது ஸ்நேகம்

முள்முடிகளைச் சுமக்க வைத்து
ஆணிகளால் அறைந்து தள்ளும் நீ
எனக்கு வேண்டாம் உனது ஸ்நேகம்

கொடுத்தலின் இன்பத்துக்கன்றி
கர்வத்தின் செருக்காய் வெளியிடும் நீ
எனக்கு வேண்டாம் உனது ஸ்நேகம்

தையல் ஊசிகளைப் போல
மனத்துணியில் ஓட்டைகள் மட்டும்
போடத் தெரிந்த நீ
எனக்கு வேண்டாம் உனது ஸ்நேகம்.

---- 85 ஆம் வருட டைரி 

3 கருத்துகள்:

  1. ஆம் எனக்கும் வேண்டாம்
    அந்தச் சினேகம்
    அற்புதமான கவிதை
    பகிர்வுக்கும் தொடரவும் நல்வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  2. வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

    பதிலளிநீக்கு

பதிலுக்கு நீங்களும் கிறுக்குங்க.. :)))