செவ்வாய், 23 ஜூன், 2015

சுகப்பிரசவம்.:-



சுகப்பிரசவம்.:-

மழைமேகம்
மனதினுள் சுழன்று
சுழன்று மன்றாடிப் போராடும்.

சலன மேகமல்ல அது.
காற்றின் திசையில்
திரிந்து சுருள.

இது சூல்கொண்ட கருமேகம்
பிரசவித்தபின்தான் நிம்மதியாகும்

மின்னலாய் உடல்நெளித்துக்
மலையைப் பற்றிக் கரம்முறித்து
முட்டி மோதி சுகப்பேறாய்
சன்ன மகிழ்ச்சி தூவும்.

மரங்கள் ஆகர்ஷிக்கும்

பொழியப் பொழிய
மண் உறிஞ்சும்

நீர் தேங்கும்
மனவோர மரங்கள்
இதமாய் நீவி
சொட்டுச் சொட்டாய்
ஆறுதல் தெளிக்கும்.

-- 85 ஆம் வருட டைரி 

3 கருத்துகள்:

பதிலுக்கு நீங்களும் கிறுக்குங்க.. :)))