வெள்ளி, 24 ஏப்ரல், 2015

சென்னை சொர்க்கம்.



வெள்ளி அலைகளில்
தங்கச்சூரியன்.
வைரமணலில் மினுமினுக்கும்.

ப்ரிய உறவுகள்
ஜன்னலில் அடிக்கடி
பரவசப்படுத்தும்.

அவசியப்படும்போது
பத்துமணி நேரத்தில்
சொந்த ஊர்மண்
நம் காலில் நெகிழும்.

உறவுகளின் நெருக்கத்தால்
குளிரும் மழையும் கூட
கதகதப்பாய்.

கொளுத்தும் வெய்யில்கூட 
குற்றாலமாய். 

பேச்சு மட்டுமல்ல.
மூச்சுக் காற்றும்கூட
தமிழாகவே ஒலிக்கும்.

சொம்பளவு நீரிலே குளித்தாலும்
சொர்க்கம் சென்னை.
சென்னைதான். 


-- 1996  ஆம் வருட டைரி. 

3 கருத்துகள்:

பதிலுக்கு நீங்களும் கிறுக்குங்க.. :)))