ஞாயிறு, 19 ஏப்ரல், 2015

குடம்.:-



குடம்.:-

கோயில் குளத்தில்
மண்பூசித்
தண்ணீர் தின்றுவரும்
அறியாமை.

கல்லில் இடுப்பில்
இடுப்பில் கல்லில்
இடுங்கி நசிந்து
முதிர்முத்திரை
மாட்டிக்கொள்ளும்.,
அனுபவம்.

சேறுகழுவிப்
பாதி நிறையும்போது
காற்று விலக்கி சத்தமிட்டு
நிறைதல் காட்டிக்கொடுக்கும்.,
அகங்காரம். 

பளபளப்பணிந்து
உடல் கலக்கி
வாயில் ஜொள் வழிக்கும்
அவசரம்.

மௌனமாய் நிரம்பி
சிந்துதல் இல்லாமல்
வெற்றிடம் நீர் உடுத்து
நடக்கும்
அடக்கம் அறிவு.

டிஸ்கி :- 85 ஆம் வருட டைரி.

3 கருத்துகள்:

பதிலுக்கு நீங்களும் கிறுக்குங்க.. :)))