சனி, 28 மார்ச், 2015

துர்க்கைகள்



இவர்கள் சிவன்களல்ல
ருத்ர தாண்டவமாடும்
மொட்டைக் கபாலிகர்கள்.

அறுத்தெறியுங்கள்
இவர்களின்
மண்டையோட்டு மாலைகளை.

பொசுக்கிச் சாம்பலாக்குங்கள்
இந்த மாந்த்ரீகர்களின்
மந்திரக் கோலை.

சுட்டுப் போடுங்கள்
அத்தனை
சூத்திரதாரிப் பயல்களையும்..

துர்க்கைகள் எல்லாம் வீரத்தை
அணிந்துகொள்ளட்டும்
இல்லையில்லை
இவர்களுக்கு வீரம்
பணிந்து போகட்டும்.

-- 85 ஆம் வருட டைரி. 

2 கருத்துகள்:

பதிலுக்கு நீங்களும் கிறுக்குங்க.. :)))