வாழ்வே மாயம் :-
சலனங்கள் சலனங்கள்
மலையிலிருந்து கடல் வரை
சலனங்கள்.
எத்தனை முறை
அடிபட்டாலென்ன ?
திரும்பவும் நிமிரத்தெரியாத
தென்னையாய் மனிதனும்.
காற்றிலகப்பட்ட சருகு இவன்
இவனுக்கென்று பாதையில்லை.
காற்றின் பாதை
இவனின் இராஜபாட்டை.
மரத்தில் கல்லில் பட்டு
நொறுங்கிப் போகும்
சருகு இவன்.
நெருப்பில் பொசுங்கி
நீரில் சவுத்துப் போகும்
சருகு இவன்.
இடையில் எத்தனை
அலைச்சல்கள் ?
சபலங்கள் ?
விண்ணிலிருந்து மண் வரை
சபலங்கள்.
வாழ்க்கை
அந்தத்தில் பிறந்த ஆதி
ஆதியில் பிறந்த அந்தம்.
அது ஒரு தொடர் சங்கிலி
வளைந்து நிமிர்ந்து கொள்ள
கோரையிலிருந்து மனிதன்
கற்றுக்கொள்ள வேண்டும்.
-- 82 ஆம் வருட டைரி.
-- 82 ஆம் வருட டைரி.
அருமை சகோ
பதிலளிநீக்குஎல்லாமுமே மாயம் தான்...
பதிலளிநீக்குநன்றி கில்லர்ஜி சகோ
பதிலளிநீக்குநன்றி தனபாலன் சகோ ஆம்