திங்கள், 16 மார்ச், 2015

தலைவன்



(வேறு )

இராமகிருஷ்ணனே
நான் காத்திருக்கிறேன்.
நீ உன் விவேகானந்தனைத்
தேர்ந்தெடுத்துவிட்டாய்

நான் கூட உன்னின்
அனைத்தையும் ஏற்றுக்கொள்ளவில்லை
உன்னை இன்னும்
ஆராய்ந்துகொண்டுதான் இருக்கிறேன்.

நீ ஒரு சுயநலமி
உனக்குப் பிடித்துவிட்டதாலேயே
அவனைத் தலைவனாக
அறிமுகப்படுத்தினாய்
அப்படியானால் உன் சீடக்கூட்டங்கள்
மந்தைகளா?
நீ சொல்வதை ஏற்றுக்கொண்டு
மேய்ப்பனின் சவுக்குகளுக்கு
ஒடுங்கிக்கொண்டு செல்ல

-- 82 ஆம் வருட டைரி 

2 கருத்துகள்:

பதிலுக்கு நீங்களும் கிறுக்குங்க.. :)))