செவ்வாய், 13 ஜனவரி, 2015

இது மலர்கள் விடுக்கும் அழைப்பு ( மனம் திறந்து)

து மலர்கள் விடுக்கும் அழைப்பு ( மனம் திறந்து)
 
சின்னப் பூக்கள்
ஹாஸ்டலோரத்தின்
ஜன்னல் பற்றும்  பற்றுக்கொடிகள்.
மலர்ந்த நினைப்பின் மந்தகாசப் புன்னகைகள்,
சிறகு விரித்துப் பறக்கும் மனச்சிட்டுகள்
மனசிற் பூத்த மகிழம்பூக்கள்
மாணவிச் செல்லங்கள்
தென்றல் காற்று லெக்சரர்களிடம்
அழைப்பு விடுக்கின்றன.
வந்து தம் மணத்தை நுகர்ந்து
நறுமணம் எனும் திறமைகளை
மற்றவரறியச் செய்யும்படி
இது மலர்கள் விடுக்கும் அழைப்பு
இது மதுத் தென்றல்களுக்காக் மட்டுமே !
தென்றல்கள் இல்லாத திருவிழாவா
எனவே தென்றல்கள் எதிர்பார்க்கப்படுகின்றன
இந்த மலர்களின் அழைப்புக்கிணங்க. J

சரோ அக்காவுக்காக.


4 கருத்துகள்:

பதிலுக்கு நீங்களும் கிறுக்குங்க.. :)))