புதன், 3 டிசம்பர், 2014

காக்கைமனம்.



கரைநீரே கரிக்கிறதே
ஆழ்கடலுள் எவ்வளவு
உப்படர்த்தியோ..

வயலோரச் சுமைதாங்கி
சுமைதாக்கி
சுமைதாங்கிச் சுமைதாங்கி

வேரிலிருந்தே பிரியும்
ரோஜாச்செடிக்கிளைகள்

தென்னைமட்டைகளாய்
உதிர்ந்துபோகும் நிகழ்வுகள்

எப்போதோ
கிடைக்கப்போகும்
சோற்றுக்காய்
திசைதோறும்
கரையும் காக்கைமனம்..

-- 84 ஆம் வருட டைரி.

4 கருத்துகள்:

  1. வணக்கம் சகோதரி
    அழகிய வரிகள் காக்கை மனதை தங்கள் வரிகள் மூலம் அறிந்தேன். அதற்காய் மிகவும் மகிழ்ந்தேன். தொடருங்கள். நன்றி..

    பதிலளிநீக்கு
  2. நன்றி அ. பாண்டியன்

    நன்றி திண்டுக்கல் தனபாலன் சகோ

    பதிலளிநீக்கு
  3. வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

    பதிலளிநீக்கு

பதிலுக்கு நீங்களும் கிறுக்குங்க.. :)))