வெள்ளி, 5 டிசம்பர், 2014

இனிப்பாயும் நெருப்பாயும்.

நெருப்பாய் இருக்கிறாய்..
இனிப்பாயும் இருக்கிறாய்..
ரசிக்கத் தோன்றுதுன் நடனம்.
சுவைக்கத் தூண்டுதுன் வார்த்தைகள்.
பூமிதி பூக்குழியாய்
விட்டெறிகிறது என்னை
உன் ஆங்காரமும் ரௌத்திரமும்.
பறந்து பறந்து சாம்பல்பூவாய்
விழுகிறேன் அதன் மேலேயே.
பின் பூக்கிறேன் அதன் மேலேயே.
சாதகப் பறவை சாம்பலில் ஃபீனிக்ஸாய்.
ஆம்
காரமும் ஒரு ருசி..
கோபமும் ஒரு அழகு.

3 கருத்துகள்:

பதிலுக்கு நீங்களும் கிறுக்குங்க.. :)))