வியாழன், 30 அக்டோபர், 2014

வெய்யில் - 3



பூமியெங்கும் உழுது செல்கிறது.
வயலானாலும் 
பழைய கோட்டையானாலும்
மலையானாலும் 
மூடிய இலைகளானாலும்
பாரபட்சமில்லாமல்
அச்(ட்)சரேகை தீர்க்கரேகை
பாகைகள் அறியாமல்
வெய்யில் கிடப்பவர் வர்ணமெல்லாம்
உறிஞ்சிக் கறுக்கி
ஒரு மஞ்சள் நிற ராஜாளியைப் போல்
தினம் பூமியின்மேல்
சிறகு விரித்துக் கவிழ்ந்து செல்கிறது.

3 கருத்துகள்:

பதிலுக்கு நீங்களும் கிறுக்குங்க.. :)))