சனி, 12 ஏப்ரல், 2014

பாதரசப் புறாக்கள்.

கனரக வாகனங்கள்
மேலும் கீழும் தேய்த்தபடி நகர
மேம்பாலத்துக்கும்
தாங்கும் தூணுக்கும்
இடைப்பட்ட வெளியில்
இருள் பூசிய சாம்பல் வண்ணத்தில்
குளிரை உரசிக் கொண்டிருக்கின்றன
பாதரசக் கண் மின்ன மணிப்புறாக்கள்.

2 கருத்துகள்:

பதிலுக்கு நீங்களும் கிறுக்குங்க.. :)))