வெள்ளி, 14 பிப்ரவரி, 2014

குயிலாய் வாழ்தல் இனிது.

கூவிக் கொண்டிருப்பது
எளிதாயிருக்கிறது..
கூடுகட்டுதலும்
முட்டையிடுதலும்
குஞ்சு பொரித்தலும்
பராமரித்தலும்
கொத்துப்படும்போது
மரிப்பிலிருந்து
உயிர்த்தலும்
போதுமெனக்
கானம் கரையக்
கருத்த வானம்
வெளுத்துக் கொண்டிருக்கிறது.
பறக்கவியலா இறக்கைகள்
ஈரத்தால் கனத்திருக்கின்றன.

5 கருத்துகள்:

  1. குயிலிடமிருந்து கூவுதலை மட்டுமே கண்டு, ரசிக்கும் உலகத்துக்கு அதன் வாழ்க்கையையும் வலிகளையும் நயமாக உரைக்கும் வரிகள்...

    பதிலளிநீக்கு
  2. நன்றி இளங்கோ

    நன்றி தனபால் சகோ

    நன்றி சுரேஷ்

    பதிலளிநீக்கு
  3. வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

    பதிலளிநீக்கு

பதிலுக்கு நீங்களும் கிறுக்குங்க.. :)))