எந்தத் தவமும் செய்யவில்லை.
நெருப்பின் மேலோ
ஒற்றைக்காலிலோ
தலை கீழாகவோ..
பகீரதனைப் போலோ..
மாதம் மும்முறையல்ல
விரும்பிய போதெல்லாம்
துளித் துளியாய்
உனதன்பு பொழிகிறது.
மாமழையே..
குளிர்ந்த கல்லாய் நனைகிறேன்.
தனக்குள்ளே அணைகிறேன்
கூதல் நெருப்பே..
துணை திரும்பும்.
ஓடமாய்த் தேர் ஓடும்
இது கார்காலம்