செவ்வாய், 6 ஆகஸ்ட், 2013

இலையின் பெருவிரல் ரேகை.

மை ஒட்டும் தாளின்
நரம்போவியமாய்
சாலைக்காகிதத்தில்
அடித்துப் படிகிறது
இலையின்
பெருவிரல் ரேகை..
முதிய கிளைகளால்
வருடும் விருட்சம்
வான் விரித்து
இளம் தளிர்வேண்டி
பகீரதன் தவத்தில்.
பொழியும்
வெய்யில்துளிகளில்
கருப்பெருகிறது
இளைய கிளைகளின்
பொடிமுடிச்சிலிருந்து
சிறுவிரல் இலைகள்.

1 கருத்து:

  1. வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

    பதிலளிநீக்கு

பதிலுக்கு நீங்களும் கிறுக்குங்க.. :)))