வேகவைச்ச வள்ளிக்கிழங்கோ,
சோளமோ , கடலையோ
பனங்கெழங்கோ,
எலந்தவடையோ
உப்பொரசி ருசிக்குமடி
உன் கரகரத்த கைபட்டு.
பள்ளிக்கூட முக்குல
மொளகாதூவி மாங்கா பத்தை,
கொடுக்காபுளி,
கமர்கட்டு,பெப்பர்மிண்டு,
சூடமிட்டாய் கல்கோனா
இனிப்பும் புளிப்புமா
நாவொரசிக் கடக்குதடி,
ஓடும் பஸ்ஸில்
சேவல்கொண்டை
பாம்படம் அசைஞ்சாட
சின்னாளப்பட்டோட
ஒரு வெள்ளந்திச்சிரிப்பை
அள்ளி அள்ளி ருசிக்கும்போது.
சோளமோ , கடலையோ
பனங்கெழங்கோ,
எலந்தவடையோ
உப்பொரசி ருசிக்குமடி
உன் கரகரத்த கைபட்டு.
பள்ளிக்கூட முக்குல
மொளகாதூவி மாங்கா பத்தை,
கொடுக்காபுளி,
கமர்கட்டு,பெப்பர்மிண்டு,
சூடமிட்டாய் கல்கோனா
இனிப்பும் புளிப்புமா
நாவொரசிக் கடக்குதடி,
ஓடும் பஸ்ஸில்
சேவல்கொண்டை
பாம்படம் அசைஞ்சாட
சின்னாளப்பட்டோட
ஒரு வெள்ளந்திச்சிரிப்பை
அள்ளி அள்ளி ருசிக்கும்போது.
ரசித்தேன்...
பதிலளிநீக்குவாழ்த்துக்கள் சகோதரி...
ஆகா! சிறுவயது காலத்து நினைவு எல்லாம் வருகிறதே.
பதிலளிநீக்குமகள் இரண்டுநாளுக்கு முன்புதான் தோசைபோன்ற சாயத்தட்டு சாப்பிட வேண்டும் என்றாள். நண்பியோ இலந்தைப்பழம் என்கிறாள் எங்கே போவது ??
பாம்படமும் சின்னாளப்பட்டும் வெள்ளந்தி சிரிப்பும் கண்டிருக்கேன் இப்பொழுது கிடைக்குமா ??
அழகிய கவி.
நன்றி தனபால்,
பதிலளிநீக்குநன்றி மாதேவி.
வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
பதிலளிநீக்குஎன்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!