வியாழன், 11 ஜூலை, 2013

எண்ணச்சுமை..

எண்ணச்சுமை..:-
**********************

என்னைக் கடந்து
போய்க்கொண்டே இருக்கிறேன்..
ஒரு சாலைத் தடையையும்.,
மழைப் பள்ளத்தையும்..
குறுக்கிடும் பாதசாரிகளையும்..

அங்கங்கே
இன்ப அதிர்ச்சியில்
எதிர்பாராமல் அடிக்கிறது
உன் பெயர் தாங்கிய
கடைப்பலகைகள்..

உன்னைக் கடந்து
பலவருடங்களாகிவிட்டன..
பழைய பலகைகளற்று
விளக்கெரிந்து மின்னும்
புதுப்பலகைகள் ஜொலிக்கின்றன.

ஒரு சாலைத் திருப்பத்தில்
பெயர்ப்பலகைகளையும்
தடையற்றுக் கடக்கிறேன்..
படபடவென்றே துடித்துக்
கொண்டிருக்கிறது இதயம்
கடக்காமல் விட்ட
உன் எண்ணச் சுமையில்..

3 கருத்துகள்:

பதிலுக்கு நீங்களும் கிறுக்குங்க.. :)))