சனி, 1 ஜூன், 2013

சுயம்..


துளிர்விடும் கொடுக்கை
ஓட்டுக்குள் மறைத்து
சுருண்டு கொள்கிறது
சுயம்..


ஒற்றைக் கிளையைப்
பற்றும்போதெல்லாம்
உடைந்து விடுகிறது
சுள்ளி.


நெருப்பை விழுங்கி
நீரில் முழுகி
நிர்வாணமாய்க் கிடக்கிறது
உடல்.


ஒன்றைச் சுட்டும்போதெல்லாம்
தன்னைச் சுட்டிச்
சதிராடிச் சிரிக்கிறது
மனம்.

3 கருத்துகள்:

பதிலுக்கு நீங்களும் கிறுக்குங்க.. :)))