புதன், 5 ஜூன், 2013

வரலாறு.

முட்டையிடக்
கூடுகட்டும் பறவைகள்
வாழ்ந்த சுவடுகளைப்
பதித்து வைப்பதில்லை.
என்னுது என்னுதென்னும்
இறுக்கமில்லை.
கைவிட்டுப் போமோவென்ற
நடுக்கமில்லை.
என் செய்வோமென்ற
சிந்தனையில்லை.
அலகுகளால் உயிர்ப்பித்து
இறக்கைகளால்
பறக்கக் கற்பித்தபின்
விட்டு விடுதலையாகின்றன
ஒன்றிடமிருந்து ஒன்று..
கிளையோடும்
இலையோடும்
காற்றோடும் கலந்து
சிதறிக் கிடக்கும் சுள்ளிகளில்
வரலாறாய்க் கிடக்கிறது
வம்சம்பெருகிய காவியம்..

4 கருத்துகள்:

  1. /// என்னுது என்னுதென்னும்
    இறுக்கமில்லை. ///

    அருமையான வரிகள் சகோதரி... வாழ்த்துக்கள்...

    பதிலளிநீக்கு
  2. அலகுகளால் உயிர்ப்பித்து
    இறக்கைகளால்
    பறக்கக் கற்பித்தபின்
    விட்டு விடுதலையாகின்றன
    ஒன்றிடமிருந்து ஒன்று..

    - Suthanthiramaga vazhindrana yaarukkum adimaiyintri.

    பதிலளிநீக்கு
  3. நன்றி தனபாலன்

    நன்றி மணவாளன்.

    பதிலளிநீக்கு
  4. வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

    பதிலளிநீக்கு

பதிலுக்கு நீங்களும் கிறுக்குங்க.. :)))