புதன், 3 ஏப்ரல், 2013

அறிதுயில்.

எண்ணங்களால் தொட்டாய்..
வண்ணத்துப் பூச்சியாகித்
தொடர்ந்தேன்..
அடர் இருளில் எங்கு
சென்றாய்..
மனுஷியாகத் திரும்பக்
கூடுமாறும் வித்தை
கற்பிக்காமலே மறைந்தாய்..
பிரபஞ்சம் தோறும்
சூரியப் பூக்கள் ..
எதனுள் மறைந்திருக்கிறாய்..
நானும் ஒளிகிறேன்..
என்றேனும் ஏதேனும்
ஒரு வண்ணம் என்னை
உனக்கு நினைவூட்டக்கூடும்..
உன் கண்ணுக்குள்
என் வண்ணம் தோன்றும்
அந்தக் கணம்
அறிதுயிலிலிருந்து
உயிர்த்தெழுவேன்..

3 கருத்துகள்:

  1. என்றேனும் ஏதேனும்
    ஒரு வண்ணம் என்னை
    உனக்கு நினைவூட்டக்கூடும்..
    உன் கண்ணுக்குள்
    என் வண்ணம் தோன்றும்
    அந்தக் கணம்
    அறிதுயிலிலிருந்து
    உயிர்த்தெழுவேன்..//

    மிக மிக அருமை
    மனம் தொட்ட கவிதை
    தொடர வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  2. வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

    பதிலளிநீக்கு

பதிலுக்கு நீங்களும் கிறுக்குங்க.. :)))