திங்கள், 25 மார்ச், 2013

ரங்கமணி என்றொரு தேவன்.

விரிந்த கண்ணாடித் தாளில்
வெளிச்சம் பட்டு வீழ்ந்தொட்டும்
சிறுபூச்சிகளாய் நாம்.

இல்லாத கூண்டுக்குள்
அடைந்து கொண்டு
விடுவி விடுவி எனக்
கதறிக் கொண்டிருக்கிறோம்.

முற்றிய வியாதியாய்
முற்றுப் புள்ளி வைக்கமுடியாமல்
முழித்து விழித்துப் பார்க்க

விட்டால் போதுமெனத்
தன் அலுவலகக் கூண்டுக்குள்
சிறைவாசமிருக்கிறார்
ரங்கமணி என்றொரு தேவன்..

1 கருத்து:

  1. வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

    பதிலளிநீக்கு

பதிலுக்கு நீங்களும் கிறுக்குங்க.. :)))