ஞாயிறு, 3 மார்ச், 2013

வினையால் அணைதல்.

அச்சமூட்டுகிறது
மூன்றாம் நடவடிக்கை
தன்மை முன்னிலை
படர்க்கை..
முதுகுத் தண்டில்
குளிர் சுரமாய் நீள்கிறது
இருவரின் ரகசியத்துள்
படரும் மூன்றாம் கை.
பஞ்சதந்திரமாய்
ஜொலிக்கிறது
நரியின் விழி
நான்காம் கோணத்துள்.
முயல்கள்
குகை வாயிலில்
குவிந்த கைகளோடு
முணுமுணுக்கும் பிரார்த்தனை..
ஓநாய்ச் சூதின்
வினையால் அணைகிறது
முயலும் நரியும். 

3 கருத்துகள்:

பதிலுக்கு நீங்களும் கிறுக்குங்க.. :)))