சாம்பல் பூக்க விழித்திடும்
வயல்வெளி மனிதர்களைத்
தங்கப்புடமிடுகிறது வெய்யில்.
அதிகப் புடத்தால்
கறுப்பைப் பூசிய
இரும்பு மனிதர்கள்
இரவுப் பாதரசத்தில் மூழ்கி
வெளுத்துக் கிடக்கிறார்கள்.
விலைவாசி அறியாது
வெள்ளியிலிருந்து
தங்கத்துக்கு மாற்றும்
ரசவாத வினையில்
தோற்றுக் கொண்டிருக்கிறது
தினப்படி வெய்யில்.

வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
பதிலளிநீக்குஎன்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!