ஞாயிறு, 23 டிசம்பர், 2012

நியாயவான்.

ஒருவனுடைய
தோல்வியின் வெற்றியை
சலிக்கச் சலிக்கக்
கொண்டாடியாயிற்று.

அர்த்த ராத்திரியிலும்
பட்டாசுச் சப்தங்கள்
அனைவரையும் எழுப்பிச்
சொல்லியாயிற்று.

திகட்டத் திகட்ட
இனிப்புகளை அள்ளி
இறைத்தாயிற்று.

துண்டைத் தலையில்போட்டு
மூலையில் அமர்ந்திருப்பதாக
அவனை கேலிச்சித்திரம்
வரைந்தாயிற்று.

அவனைப் பற்றிக்
கருத்துக் கணிப்பு
கேட்கப்படும்போது
நியாயமானவன் போல
நடித்தாயிற்று.

இன்னும் எத்தனை வருடம்
எதிரியாய் மனதுள்
பாவித்துக் கொண்டே
நட்போடு இருக்கவேண்டுமோ
என்ற சலிப்போடு.

1 கருத்து:

  1. வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

    பதிலளிநீக்கு

பதிலுக்கு நீங்களும் கிறுக்குங்க.. :)))