நான் யாராக ஆக வேண்டும்..?
தருணங்களைக்
கடந்து கொண்டிருக்கிறேன்.
குதிரையும் தயார்.
வரைபடமும் தயார்.
வார்ப்பட்டியில்
கால் வைக்கும்போதெல்லாம்
வாரி விடுகின்றன
தயக்கங்கள்.
சேணமற்று அண்டசராசரமும்
வெறித்தபடி இருக்கும்
என்னைப் பரிவோடு
பார்த்துக் கொண்டிருக்கின்றன
குதிரையும் காலமும்.

வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
பதிலளிநீக்குஎன்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!
Arumai.
பதிலளிநீக்குநன்றி மணவாளன்
பதிலளிநீக்கு:))
பதிலளிநீக்கு