வியாழன், 4 அக்டோபர், 2012

சேணம்.

நான் யாராக ஆக வேண்டும்..?

தருணங்களைக்
கடந்து கொண்டிருக்கிறேன்.

குதிரையும் தயார்.
வரைபடமும் தயார்.

வார்ப்பட்டியில்
கால் வைக்கும்போதெல்லாம்
வாரி விடுகின்றன
தயக்கங்கள்.

சேணமற்று அண்டசராசரமும்
வெறித்தபடி இருக்கும்
என்னைப் பரிவோடு
பார்த்துக் கொண்டிருக்கின்றன
குதிரையும் காலமும்.

4 கருத்துகள்:

பதிலுக்கு நீங்களும் கிறுக்குங்க.. :)))