வியாழன், 25 அக்டோபர், 2012

தற்காப்பு

உணர்வு உறைகளில்
செருகிக் கிடக்கும்
எண்ணக் கத்திகளை
உருவி ஏந்துகிறேன்
ஏறுக்குமாறாய்த்
தாக்குபவைகளிலிருந்து
தற்காக்கும் பொருட்டு.

குயுக்திகளற்று
சுழலும் அவை
ஒளிப்பொறிகள் தெறிக்க
மின்னுகின்றன
செருக்குகள் அற்று
சுயகம்பீரம் மிளிர.

3 கருத்துகள்:

பதிலுக்கு நீங்களும் கிறுக்குங்க.. :)))